Tuesday 25 September 2018

Thai trip - Coral Islands

காலைல எந்திச்சு ஹோட்டல்லயே ப்ரேக்பாஸ்ட முடிச்சுட்டு ஓர் 10 மணிக்கு .கிளம்புனோம் .. Coral Island க்கு ஸ்பீட் போட்ல தான் போகணும்.. அதுனால நேரா போட்டெல்லாம்(boat) கிளம்புற இடத்துக்கு(dock) போனோம் .. அந்த இடமே செமயா டிசைன் பண்ணி வச்சிருக்காங்க.. தரையெல்லாம் blue கலர்ல பெயிண்ட் அடிச்சிருக்கு.. ஒரு சைடு கடல்.. இன்னொரு சைடு மலை.. அந்த மலைல Pattaya City னு பெருசா எழுதிருக்கும்.. இங்க இருந்தே  போட்டோக்களும் ஆரம்பிச்சுருச்சு...


இந்த இடத்துல இருந்து ஒரு பிரிட்ஜ் வழியா நடந்து போனோம்னா ரெண்டு சைடும் நிறைய docks இருக்கும்.. அதுல நம்ம படகு எங்க இருக்கோ அதுல ஏரிக்க வேண்டியது தான் ... நிறைய படகு கம்பெனிகள் இந்த சேவையை செய்கின்றன.. இந்த படகில் ஒரு 20 பேர் வரை ஏறிக்கொள்ளலாம்.. எங்கள் குரூப்புக்கு 2 படகுகள் எடுத்து கொண்டோம் ..


இந்த படகுல ஏறி காத்த கிழிச்சுட்டு போற சுகமே தனி தான்.. அலைகள்ல படகு தூக்கி தூக்கி போடும் பொது.. ஐயோ அம்மானு படகுல ஒரு சத்தங்களும் சிரிப்புகளும் தான்.. Coral Island போறதுக்கு முன்னாடி சில adventure activities இருக்கு.. அதுல நாங்க முதல்ல போனது பாராக்ளிடிங் (Paragliding).. முந்துன படத்துலயே பாக்கலாம்.. படகை சுத்தி எவ்வளவு பாராச்சூட்ஸ் பறக்குதுனு ... இந்த விளையாட்டையும் நிறைய கம்பெனிகள் நடத்துகின்றன.. ஒவ்வொரு கம்பெனியும் அவுங்களுக்குனு ஒரு dock வச்சிருக்காங்க.. அதாவது கடலுக்கு நடுவுல பெருசா மேடை மாதிரி அமைச்சிருக்காங்க.. அங்கேயே டாய்லெட் , டிரஸ் மாத்த வசதிலாம் இருக்கு..  கீழ உள்ள படத்தை பாருங்க.. உங்களுக்கு ஓரளவுக்கு ஐடியா கிடைக்கலாம்..


இந்த படத்துல இருக்குற மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஹெல்ப் பண்ண 4 பேரு இருப்பாங்க.. இவங்க தான் நீங்க பறக்குறதுக்கும் இறங்குறதுக்கும் ஹெல்ப் பண்ணுவாங்க.. முதல்ல உங்களுக்கு பாராச்சூட் மாட்டிவிட்டு.. சுத்தி பெல்ட்டெல்லாம் போட்டுட்டு ஒரு கயறு மூலமா ஒரு ஸ்பீட் போட்ல கட்டிருவாங்க... போட் நகர ஆரம்பிச்சதும் நீங்களும் ஓடி போய் ஒரு குதி.. அவ்வளவு தான் பறக்க ஆரம்பிச்சிடுவீங்க... இந்த மாதிரி...


செமயா இருக்கும்ல.. ஒரு 5 நிமிஷம் கிட்ட வானத்துல பறவை மாதிரி பறந்துட்டு திரும்ப இறங்கிறலாம்.. நீங்க விருப்பப்பட்டா கடல்ல உங்கள முக்கி கூட எடுப்பாங்க.. பாதுகாப்பை பொறுத்த வரை பிரச்சனையே இல்லை ... செம என்ஜாய் தான்..10 வயசுல இருந்து 60  வயது வரை எங்க குடும்பத்துல நிறைய பேரு இதை என்ஜாய் பண்ணாங்க...

பாராக்ளிடிங்குக்கு அப்புறம் Snorkling, scuba diving  கூட இருக்குதுனாங்க...  நெட்ல சுட்டது  ..


அது கொஞ்சம் காஸ்டலியா இருந்ததால வேணாம்னுட்டு நேரா பீச்சுக்கு போலாம்னு கிளம்பிட்டோம்...வெள்ளை வெளேர்னு மணலும் நீல நிறத்தில் கடலுமாய் பீச் கண்கொள்ளா காட்சின்னு தான் சொல்லணும்... கோவால இருக்கிற மாதிரி இங்கயும் பீச் ஓரத்துல நிறைய shacks இருக்கும்.. shacks னா ஜஸ்ட் குடிசை மாதிரி போட்டு அதுல ரெஸ்ட் எடுக்கறதுக்கு chair மாதிரி போட்டிருப்பாங்க... கூடவே சரக்கு சைடு டிஷ் எல்லாம் கிடைக்கும்.. தண்ணில இறங்கி விளையாடிட்டு ரெஸ்ட் எடுக்கணும்னா இங்க வந்துக்கலாம்.. இங்கயும் banana boat ride மாதிரி விளையாட்டுகள் இருக்கு.. என்ஜாய்மென்டுக்கு பஞ்சமே இல்லனு தான் சொல்லணும்..






மனசு நிறைய சந்தோஷத்தோட ஹோட்டலுக்கு திரும்பினோம்... அடுத்ததாக நாங்க போன இடம் பொதுவாக டூரிஸ்டுகள் அவ்வளவாக போகாத இடம்.. ஆனால் நமது இந்திய பாரம்பரியத்தோட நெருங்கிய சம்பந்தமுள்ள ஒரு இடம்!!!! 




Thai trip - Sriracha Tiger Zoo

என்னோட வாழ்க்கையில எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்களில் ஒன்று பயணம்.. என்னோட நண்பர் ஒருத்தர் சொன்னாரு.. உங்க ஜாதகப்படி உங்க வாழ்க்கை முழுக்க பயணம் தொடர்ந்துக்கிட்டே இருக்கும்னு.. ஒருவேளை அது உண்மை தான் போல.. அந்த விதத்துல என்னோட தாய்லாந்து பயணம் ரொம்பவே ஸ்பெஷல்.. ஏன்னா நாங்க போனது 36 பேர் கொண்ட family trip ... தாய்லாந்துக்கு குடும்பத்தோட போறியா... 36 பேரா.. ஒரு வாரமா.. இப்படி வித விதமான ஆச்சர்யத்துடனான கேள்விகள்... கிளம்புற நாள் நெருங்க நெருங்க எனக்கும் கொஞ்சம் டென்ஷன் ஏற ஆரம்பிச்சுருச்சு...ஒருவழியா எல்லா பார்மாலிட்டியும் முடிஞ்சு பிளைட் கிளம்ப வேண்டிய கேட்டுக்கு வந்ததுக்கப்புறம் கொஞ்சம் நிம்மதியாயிருந்தது..

ஸ்ரீலங்கன் விமானம் மூலமா அதிகாலையில பாங்காக் வந்து சேர்ந்தோம்..நாங்களே 36 பேருங்கறதால எங்க குரூப்புக்குன்னு தனியா ஒரு volvo bus கொடுத்துட்டாங்க.. நாங்க கிளம்புற வரைக்கும் அந்த பஸ் எங்களோடயே இருந்தது.. பாங்காக்கிலிருந்து பட்டயா போகும் வழியில் நாங்கள் பார்த்த முதல் இடம் இருந்தது.. அது தான் Sriracha Tiger Zoo.

இந்த Zoo ல ஒரு மறக்க முடியாத அனுபவம் எங்களுக்காக காத்துக்கிட்டிருந்தது... Photo shoot with a live tiger 😊😊😋


நம்ப முடியலையா.. கூகுள்ல தேடிப்பாருங்க.. அந்த அளவுக்கு புலிய பழக்கி வச்சிருக்காங்க.. அது ஃபோட்டோக்கு ஒழுங்கா போஸ் குடுக்காட்டி ஒரு குச்சிய வச்சு குத்துறாங்க.. உடனே உறுமுது.. ஃபோட்டோ எடுத்துக்கிறாங்க.. Amazing!!!
இதே மாதிரி குட்டிப்புலிய மடியில் வைத்து பால் குடுக்கலாம் அனுமதிக்கிறாங்க...Crazy!!!

அதுக்கடுத்ததா பார்த்தா புலிகளை வைச்சு ஒரு ஷோ வேற பண்ணுறாங்க.. அதுல புலி டிரைனர்க்கு shake hands பண்ணுது.. முன்னங்கால் ரெண்டையும் தூக்கிட்டு பின்னங்கால்ட்டு நின்னுகிட்டே நடக்குது.. நம்ம ஊர் சர்க்கஸ்ல பாக்குற மாதிரி டேபிள்ல இருந்து இன்னோரு டேபிளுக்கு தாவுது.. தீக்குள்ள பாயுது.. அந்த அளவுக்கு டிரெய்ன் பண்ணி வச்சிருக்காங்க.. சில ஃபோட்டோக்கள் இங்கே..





இதுக்கடுத்து நாங்க பார்த்தது முதலை ஷோ.. புலி கூட கண்ணோடு கண் பாக்குது.. அத எப்படியோ பழக்கிட்டாங்க.. ஆனா இந்த முதலைகளை எப்படித்தான் பழக்கினாங்களோ தெரியலை.. முதலைய இழுத்து போட்டு விளையாடுறாங்க.. அது வால்ட்டு அடிக்க பாக்குது.. தப்பிக்கறாங்க.. உச்ச கட்டமா அத வாய திறக்க சொல்லி அப்படியே வச்சிருக்க சொல்றானுக.. அப்புறம் தலைய முதலை வாய்க்குள்ள குடுக்குறாங்க.. அய்யோ... செம திகில் தான்..
உண்மைய சொல்லனம்னா உயிரைக் கொடுத்து ஷோ நடத்துறாங்க..



இதே மாதிரி யானை ஷோ, Pig race, scorpion queen அப்படீன்னு நிறைய இருக்கு.. ஒரு 3 - 4 மணி நேரம் நல்லா பொழுது போனது..
அதற்கடுத்து அங்க இருந்து கிளம்பி நாங்க பட்டாயால தங்கி இருந்த ஹோட்டலுக்கு போயிட்டோம்.. அதுக்கப்புறம் ரெஸ்ட் தான்..

மறுநாள் தான் செம எண்டர்டெயின்மென்ட்..


Friday 9 December 2016

பயணம் - இராமேஸ்வரம் & தனுஷ்கோடி 3

இராமேஸ்வரம் வரை வந்த யாரும் கண்டிப்பாக சென்று வர வேண்டிய இடம் தனுஷ்கோடி.. அதற்கு முக்கியமான தேவை 4 wheel drive வசதி கொண்ட வாகனம்... ஏனென்றால் தனுஷ்கோடி முழுவதும் கடல் மணல்  தான்...ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கப்புறம் சாலை வசதி கிடையாது... நாம் பெரும்பாலும் உபயோகிப்பது 2 wheel drive வாகனங்களே... அதனாலென்ன வாடகைக்கு எடுத்து கொள்ளும் வசதி உள்ளது... அதிலும் 2 வகை உள்ளது... ஒன்று ஜீப்.. நமக்குன்னு பிரைவேட்டா ஒரு ஜீப்பை வாடகைக்கு(டிரைவரோட தான்) எடுத்துக்கலாம்... நம்ம சொல்ற இடத்துல இருந்து பிக்கப் பண்ணிட்டு தனுஷ்கோடியை சுத்தி காமிச்சுட்டு கொண்டு வந்து விட்ருவாங்க... இன்னொன்னு மஹிந்திரா வேன்...நம்ம ஊர் ஷேர் ஆட்டோ மாதிரி தான்... ஏறுங்க ஏறுங்கனு ஏத்தி அடைச்சுட்டு போவாங்க.. ஆனா டிக்கெட் விலை கொஞ்சம் சௌரியமா இருக்கலாம்... நாங்களே 6 பேர் இருந்ததால ஒரு ஜீப் வாடகைக்கு எடுத்துக்கிட்டு கிளம்பினோம்... ஒருவிதத்துல ஜீப் தான் வசதியும் கூட...

நாங்க முதல்ல போன இடம் கோதண்டராமஸ்வாமி கோவில்... தனுஷ்கோடி போற வழில ஒரு லெப்ட்டு எடுத்து போனா தீவுக்குள்ள ஒரு தீவு மாதிரி இந்த கோவில் இருக்கு... கொஞ்சம் வடநாட்டு பாணில இருக்குனு கூட சொல்லலாம்... 1000 வருசத்துக்கு மேல பழமையானதுன்னு சொல்றாங்க... ரொம்ப பிரமாதமான இடமனெல்லாம் சொல்ல முடியாது... நேரம் இருந்தா ஒரு தடவை போயிடு வாங்க..



தனுஷ்கோடியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம்..கீழே உள்ள படத்தில் உள்ள மாதிரி தான்... சாலை, சாலையின் ரெண்டு புறத்திலும் முட்ச்செடிகள்... அதற்கு பின் இரண்டு புறமும் கடல் தான்... கூகிள் மேப்ல பாத்தீங்கன்னாலே தெரியும் உங்களுக்கு.. இதே மாதிரி நிலப்பரப்பு ஒரு வெளிநாட்டில் இருந்திருந்தால் அதை அப்படி அழகுபடுத்தி வைத்திருப்பார்கள்... இதேமாதிரி ஒரு இடத்தை ஆஸ்திரேலியாவில் பார்த்திருக்கிறேன்..அவ்வளவு அருமையாக பராமரிக்கிறார்கள்... வரலாறே இல்லாதவர்களெல்லாம் அவர்கள் வரலாற்றில் அவ்வளவு ஆர்வம் காமிக்கிறார்கள்... நாமோ புறக்கணிக்கிறோம்... சரி இந்த புலம்பலை விட்டுட்டு தொடர்வோமே...



இந்த இடத்துல தான் எங்க ஜீப் டிரைவர் வேண்டிய விட்டு இறங்கி வண்டிக்கடில ஏதோ வேலை பண்ணினார்... என்னனு கேட்டேன்... இதுவரைக்கும் 2 wheel drive mode ல இருந்ததை 4 wheel mode க்கு மாத்தினாராம்.. அதிலிருந்தே ஆர்வம் தாங்க முடியவில்லை... ரோட்டிலிருந்து உள்ளே திரும்பியதும் நாங்கள் பார்த்த காட்சி இது தான்... வெள்ளை வெளேரென்ற மணல் பரப்பும் அதற்கு மேலே நீலவானமும் தான்...


இது தான் நான் முன்னமே சொன்ன வேன்... இந்த மாதிரி வாகனங்கள் போன தடத்துலயே தான் மற்ற வாகனங்களும் போகின்றன...


அங்கங்கே இந்த மாதிரி நீர்த்திட்டுகளும் கொக்குகளும்...


இது தான் தனுஷ்கோடியில் செயல்பட்ட ரயில் நிலையத்தின் மிச்சம்...


இது அங்கே இருந்த சர்ச்சின் மிஞ்சிய சுவர்கள்.. இந்த சுவர்களும் சமீபத்தில் விழுந்து விட்டதாக கேள்வி பட்டேன்...


வழி நெடுக இந்த மாதிரி உடைந்த படகுகளை பார்க்கலாம்... ஒருவிதத்தில் இவையெல்லாம் நடந்து முடிந்த ஒரு சோகத்தின் சின்னங்களாக இருந்தாலும் புகைப்பட கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்ல தீனி தான் .... இந்த படத்தில் தெரியும் டவர் நமது தொலைத்தொடர்பு துறையால் அமைக்கப்பட்டுள்ளது... இங்கிருந்து இலங்கை வெறும் 21கிமீ தானாதலால் இந்த டவர் மேலிருந்து பார்த்தல் கூட தெரியலாம்..


கீழே இருப்பது தான் நாங்கள் வந்த ஜீப்... தனுஷ்கோடியின் ஒரு கோடியில் வங்காள விரிகுடாவும் இந்துமாக்கடலும் சந்திக்கும் முனையில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்...


ஒருபுறம் அலைகளே இல்லாத வங்க கடல்... மறுபுறம் ஆர்ப்பரிக்கும் இந்திய பெருங்கடல்... இவற்றின் சங்கமம்... பிரமிப்பான காட்சி என்று தான் செல்வேன்... stunning moment.... அலையே இல்லாமல் ஒரு கடல் இருக்க முடியுமா என்பதை நேரில் பார்த்தால் மட்டுமே நம்ப முடியும்... சுண்டல் விக்கிறவுங்க முறுக்கு விக்குறவுங்க தொந்தரவு இல்லாம பெருசா கூட்டமும் இல்லாம எல்லையில்லாமல் விரிந்து கிடைக்கும் கடலை ரசிப்பதே தனி சுகம் தான்...


அதே மாதிரி கடலுக்குள் அங்கங்கே சில மணல் திட்டுக்களையும் காணலாம்.. அதில் நாலாவது திட்டு வரை இந்திய எல்லைனு நினைக்குறேன்... மற்றபடி காற்று கொஞ்சம் பலமாக வீசினால் மணலை தரையோடு அடித்துக்கொண்டு வருவதையும் பார்க்கலாம்... கீழே உள்ள வீடியோவில் இதையும் கடல் மணல், நீரின் நிறமாற்றங்களையும் பார்க்கலாம்...





இன்னொரு முக்கியமான விஷயம் சில மாதங்களில் இந்த கடல் உள்வாங்கவும் செய்கிறதாம்.. அதாவது அப்படி உள்வாங்கும் போது இப்போது தெரியும் மணல் பரப்பில் பாதி கூட பார்க்க முடியாதாம்... டிரைவர் சொன்னது சரியாக நியாபகம் இல்லை... கிட்டத்தட்ட 6 மாதங்கள் கடலின் அளவு ஒரு மாதிரியும் மீதி உள்ள 6 மாதங்களில் வேறு அளவிலும் இருக்குமாம்... நான் சென்றது October மாதம்...அப்போது கடல் உள்வாங்காத சமயம்.. இதெல்லாம் தெரியாமல் தான் அங்கு சென்றேன்.. ஒருவிதத்தில் அதிர்ஷ்டம்னு தான் சொல்லணும்... இதை மாதிரி எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன...

நம்மில் பெரும்பாலோரை பொருத்தவரை தனுஷ்கோடி என்பது 1964 புயலில் அழிந்து நமது அரசால் வாழத்தகுதியில்லாததாக அறிவிக்கப்பட்ட ஒரு இடம் அவ்வளவு தான். ஆனால் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய இடம்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான  அனுபவத்தை தரலாம்.. 
அது தான் தனுஷ்கோடி!!!

Thursday 8 December 2016

பயணம் - இராமேஸ்வரம் & தனுஷ்கோடி 2

பாம்பன் பாலத்திலிருந்து 20 நிமிட பயணத்தில் இராமேஸ்வரம் உங்களை வரவேற்க தயாராயிருக்கும்!!! ஊருக்குள் நுழைந்ததுமே ஒரு முக்கியமான மாற்றத்தை நீங்கள் உணர முடியும்.. எங்கு பார்த்தாலும் வெளேரென்ற கடல் மணல் தான் சாலையோரத்தில் தெரிகிறது.. எப்படி தான் இந்த ஊர் உருவானதோ... எப்படி இவ்வளவு பெரிய கோவிலை கட்டினங்களோனு நினைத்து பார்த்தால் ஆச்சரியமாக தான் இருக்கிறது... இந்த கோவில் கட்டுவதற்காக திருநெல்வேலி பக்கத்திலிருந்தும் இலங்கையின் திரிகோணமலையிலிருந்தும் கற்கள் கொண்டு வந்து கட்டினார்கள் என்றால் நிஜமாகவே பிரம்மாண்டமான சாதனை தான்...


கோவிலை நெருங்க நெருங்க சாலையும் நெருக்கமாக இருக்கிறது.. அதனால் இந்த ஊருக்குள் கார் ஓட்டுவதும் பார்க் செய்வதும் கொஞ்சம் சிரமம் தான்.. அதனால் முடிந்த அளவுக்கு கார் தேவைப்படாத மாதிரி பிளான் செய்து கொள்ளவும்... அதற்கு முக்கியமாக செய்ய வேண்டியது கோவிலுக்கு அருகில் தாங்கும் இடத்தை தேர்ந்தெடுப்பது... முக்கியமான புனிதத்தலம்/சுற்றுலாத்தமாதலால் தங்குவதற்கு நிறைய options இருக்கு... பெரும்பாலான இடங்களுக்கு இணையத்தில் rating  & reviews  இருப்பதால் நமக்கு பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.. நான் தங்கியது ஹோட்டல் பிருந்தாவன் ரெசிடெண்சி.. இவர்கள் இணையத்தில் கொடுத்திருக்கும் விலையை விட குறைந்த விலைக்கு தருகிறார்கள்.. முதலிலேயே போனில் பேசி ரூம் வாடகையை fix பண்ணிரலாம்.. இந்த பயணத்தை பொறுத்தவரை எனக்கு laxury முக்கியமில்லை.. அதனால் பேமிலி ரூம் ac வசதியுடன் நன்றாக இருந்தது... பாத்ரூம் மற்றும் படுக்கை வசதிகள் அனைத்தும் மிக சுத்தமாக இருந்தது...ஹோட்டல் முன்னாடியே கார் பார்க் பண்ணி கொள்ளலாம்.. குறைன்னு சொல்லனும்னா இந்த ஹோட்டலில் ரெஸ்டாரண்ட் வசதி இல்லை... ஆனால் ரிசப்ஷனில் ஆர்டர் செய்தால் அவர்களே ஒரு நல்ல மெஸ்ஸிலிருந்து வாங்கி வந்து தருகிறார்கள்.. நாங்கள் போய் சேர்ந்தது மதிய நேரமாதலால் மீல்ஸ் வாங்கி சாப்பிட்டோம்... நல்ல சுவை.. கண்டிப்பாக வயிற்றுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை..😃😃

ஹோட்டலின் இணைய முகவரி: http://www.hotelbrindavanresidency.com/




மேலே உள்ள படத்தை பார்த்தாலே தெரியும், ஹோட்டலில் இருந்து கோவில் எளிதாக நடக்க கூடிய தூரம் தான்.. அதே மாதிரி அக்னி தீர்த்தமும் கடல் புறமும் கூட மிக அருகில் தான்... பொதுவாக ராமேஸ்வரத்தில் சாப்பாடு பிரச்சனை இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.. பிராண்ட் ஹோட்டல் இல்லையென்றாலும் டீசெண்டான ஹோட்டல் நிறையவே இருக்கிறது... எனக்கு தெரிந்து ஒரே பிராண்டட் ஹோட்டல் TTDC தான்... இதையும் மேலே உள்ள மேப்பில் பார்த்துக்கொள்ளலாம்... இங்கு சாப்பிட்ட அனுபவத்தை பிறகு சொல்கிறேன்... மதிய உணவுக்கு பிறகு சிறிது ஓய்வெடுத்துவிட்டு தனுஷ்கோடி சென்றோம்.. அதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்..
Non-Linear ?!!!!

எல்லாரும் ராமேஸ்வரத்திலுள்ள தீர்த்தங்கள் பற்றி கேள்வி பட்டிருப்பேர்கள்.. 64 தீர்த்தங்கள் உள்ளனவாம்.. அவற்றில் முக்கியமான 22 தீர்த்தங்கள் கோவிலுக்கு உள்ளே இருக்கின்றன.. இந்த தீர்த்தங்களை பற்றி பல கருத்துக்கள் உள்ளன.. எல்லா தீர்த்த கிணறுகளும் பக்கத்துல பக்கத்துல தான் இருக்கும்.. 2 அடி தூரத்துக்குள்ள தான்.. ஆனா ஒவ்வொரு தீர்த்தத்துலயும் தண்ணீர் சுவை வேற மாதிரி இருக்கும்னு சொல்றாங்க.. எனக்கு என் மனைவி சமையல்லயும் வித்தியாசம் கண்டு பிடிக்க தெரியாது... இங்கயும் தெரியல... ஆனா தண்ணீர் சுவை அருமை... இந்த தீர்த்தங்கள்ல குளிச்சு முடிச்சதுக்கப்புறம் தான் நம்ம பூர்வ ஜென்மத்துல புண்ணியம் பண்ணி இருந்தோம்னா அதோட பலன்களெல்லாம் நமக்கு வர ஆரம்பிக்கும்னு இன்னொரு நண்பர் சொன்னார்... எது எப்படியோ இது கண்டிப்பாக ஒரு இனிய அனுபவமே.. காலையிலேயே ரூம்ல குளிச்சுட்டு தான் இந்த கோவிலுக்கு வந்தோம்.. முதல்ல அக்னி தீர்த்தத்துல குளிச்சுட்டு தான் மத்த தீர்த்தத்துல குளிக்க போனும்னு சொன்னாங்க... அக்னி தீர்த்தம்குறது கடலோட கரையில ஒரு இடம் தான்... அந்த இடத்தை பொய் பார்த்தீங்கன்னா அது கடல்னு நம்பவே மாட்டிங்க.. ஒரு ஏரிக்கரை மாதிரி தான் இருக்கும்... அலைகளே கிடையாது... அதே மாதிரி இன்னொரு அதிர்ச்சியான விஷயம், சுத்தம்கிறது மருந்துக்கு கூட கிடையாது... சில சிறப்பு பூஜை செய்யுறவுங்க அப்படியே அவுங்களோட உடை மற்றும் சில பூஜை பொருட்களையெல்லாம் அங்கேயே விட்டுட்டு வரணும்ங்கிறது ஐதீகமாம்... மற்றதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்... நான் பெரியவர்களுடன் போனதால் பெரிதாக மறுத்து பேச விரும்பவில்லை.. அதனால் கையில 2 சொட்டு தண்ணி எடுத்து தலையில தொளிச்சுட்டு வெளில வந்துட்டேன்.. அதுக்கப்புறம் தான் கோவிலுக்குள்ளே போனோம்.. கோவிலுக்குள்ள உள்ள தீர்த்தங்கள்ல குளிக்குறதுக்கு பணம் கட்டி அனுமதி சீட்டு வாங்கி உள்ள போகவேண்டியதுதான். நாங்க தெரிஞ்ச ஒருத்தர் மூலமா போனதால எங்க கூடயே ஒருத்தர் வந்து இந்த தீர்த்தங்களுக்கெல்லாம் வரிசைப்படி அழைத்து சென்றார். தீர்த்தம்கிறது ஒரு கிணறு தான்.. நம்ம போக போக அந்த கிணத்துல இருந்து ஒரு வாளில தண்ணி எடுத்து ஊத்துவாங்க.. அவ்வளவு தான்.. நான் அக்டோபர் மாசம் போயிருந்ததுனால தண்ணி ஜில்லுனு இருந்துச்சு... ஒரு சில தீர்த்தங்கள்ல தண்ணி இல்லாததால அதெல்லாம் skip பண்ணிட்டு போனோம்... மொத்தத்துல இது ஒரு மறக்க முடியாத அனுபவம் தான்.. இந்த ஈரத்தோட சாமி கும்பிட போக கூடாதுங்கறதுனால மறுபடியும் ரூமுக்கு போய் டிரஸ் மாத்திட்டு போலாம்னு கிளம்பினோம்.. டிரஸ் மாத்தி ரெடி ஆகுறதுக்கும் பசி எடுக்கறதுக்கும் சரியா இருந்துச்சு...

நாங்க தங்கி இருந்த ஹோட்டல்ல விசாரிச்சப்ப TTDC பத்தி சொல்லி சாப்பாடு நல்லா இருக்கும்னு சொன்னாங்க.. பொதுவாக எனக்கு government institutions மேல பெருசா நம்பிக்கையில்லாம தான் போய் பார்த்தேன்.. முதல் ஆச்சர்யம் buffet.. அடுத்த ஆச்சர்யம் சுவை.. அதற்கும் மேலே விலை.. சென்னையிலிருந்து வருபவர்களுக்கெல்லாம் அந்த விலையை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும்... சாப்பாடும் சரி அந்த இடமும் சரி... அருமை.. அதே மனசோட சாமி கும்பிட்டுவிட்டு மதுரை செல்ல ரெடி ஆனோம்.. ராமர் பாதம், லட்சுமண தீர்த்தம்னு இன்னும்கூட ஒரு சில இடங்கள் இருக்கு... அதெல்லாம் அடுத்த முறை வரும்போது பார்த்துக்கொள்ளலாம்னு கிளம்பிட்டோம்....

அடுத்த பதிவுல தனுஷ்கோடி அனுபவங்களை பத்தி சொல்றேன்...


Tuesday 6 December 2016

பயணம் - இராமேஸ்வரம் & தனுஷ்கோடி 1

நம்ம எல்லாருக்கும் ஒவ்வொரு விசயத்துல ஆர்வம் இருக்கும்...அந்த விதத்துல எனக்கு மிகவும் விருப்பமானது பயணங்களே ...

தமிழகத்தினொரு கோடியில் இருக்கும் சரித்திர பிரசித்திபெற்ற ஊர்களான இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடிக்கு சென்றிருந்தேன்... இந்த முறை எனது பயணம் மதுரையிலிருந்து தொடங்கியது.. மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக கிட்டத்தட்ட 180கிமீ தூரம்.. இந்த ஊர் பெயர்களையெல்லாம் முன்னரே கேள்விப்பட்டிருந்தாலும் இது வரை சென்றதில்லை.. அதனால் ஒரு கூடுதல் ஆர்வத்துடன் பயணத்தை தொடங்கினோம்..


மதுரையை விட்டு காலை 6 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டதால் எங்குமே ட்ராபிக் தொந்தரவு இல்லை... சாலையும் நல்ல தரத்திலிருந்ததால் நல்ல வேகத்தில் செல்ல முடிந்தது.. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திலெல்லாம் ராமநாதபுரத்தை அடைவதற்கும் காலை உணவுக்கான நேரத்துக்கும் சரியாக இருந்தது... ஊருக்குள் வந்ததும் ஓரிருவரிடம் விசாரித்ததில் ஹோட்டல் ஐஸ்வர்யா நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்... சரி, போய் பார்ப்போமே என்று போனால் நிஜமாகவே ஒரு ஆச்சர்யம் என்றால் மிகையாகாது... ஹோட்டல் உள்ளலங்காரங்களும் அந்த சூழலும் அருமை... எல்லா இடத்திலும் நான் கவனிக்கும் விஷயமான வாஷ்ரூமும் அவ்வளவு சுத்தமாக இருந்தது.. வழக்கமாக காலை நேரங்களில் ஆர்டர் செய்யும் தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளே ஆர்டர் செய்தோம்.. உணவுகள் உடனுக்குடன் வந்ததுடன் சுவையும் மிக அருமை... சாம்பார் மட்டும் காரம் கொஞ்சம் ஜாஸ்தி... குழந்தைகள் தான் ஆ ஊ என்றார்களே தவிர எங்களுக்கு பேஷ் பேஷ் தான்!!!


ஹோட்டல் அட்ரஸ் மற்றும் அருகிலுள்ள இடங்களை மேலே உள்ள படத்திலிருந்து எடுத்து கொள்ளுங்கள்.. B1 போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே உள்ளது என்று நினைக்குறேன்.. தேசிய நெடுஞ்சாலை என்பதால் காரை நிறுத்துவதிலும் பெரிய பிரச்னை இல்லை.. ஒரு நல்ல ஓய்வுக்கப்புறம் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்..

ராமநாதபுரத்திலிருந்து 30-40 நிமிட பயணத்தில் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் வந்து விடுகிறது... அது தான் பாம்பன் பாலம்.. பாம்பன் பாலத்திற்கு ஈடு கொடுக்கும் வலிமைனு சங்கர் சிமெண்ட் அறிவிப்பு இருக்கானு தேடி தேடி பார்த்தேன்... ஒன்னும் காணும் 😜😜

அங்க ஒரு டோல் பூத் ஒன்னு வச்சு வசூலிக்குறாங்க... டோல் கட்டிட்டு உள்ள நுழைந்தால் பாம்பன் பாலம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது..போலீசார் வாகனங்களை ஒரு வரிசையில் நிறுத்தி இறங்கி சென்று அந்த இடத்தின் காட்சிகளை காண அனுமதிக்கிறார்கள்.. அந்த கடலின் நிறமும் அங்கே கிடைக்கும் காட்சிகளும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை.. பாலத்தின் இரண்டு புறமும் கடலை பார்த்தவுடன் குழந்தைகளின் குதூகலத்துக்கு அளவே இல்லை... எத்தனையோ இணைய தளங்களில் பார்த்திருப்பேர்கள் என்றாலும் சில படங்கள் இங்கே..



படகுகளின் அணிவகுப்பு !!!


பாலத்தின் அடியில் செல்லும் சிறிய கப்பல்...


அலைகள் இல்லாத இராமேஸ்வர கடலும் அதன் நீல நிறமும் கொள்ளை அழகு... ஒரு வழியாக பாம்பன் பாலத்தை ரசித்து விட்டு இராமேஸ்வரம் தீவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம்.. அடுத்த பதிவுக்கு போகுமுன் டாப் வியூவில் பாம்பன் பாலம்...



Saturday 3 December 2016

நாடி ஜோதிடம் -நம்பலாமா?! - நிறைவு

கடந்த 3 பதிவுல எனக்கு தெரிஞ்ச அளவுக்கு நாடி ஜோதிடம் பற்றி விளக்கி இருக்கிறேன். இப்ப நான் எங்க பார்த்தேன்னு சொல்றேன்.. ஏன்னா நான் முன்னாடியே சொன்ன மாதிரி, போலிகள் தான் இதுல நிறைய இருக்காங்க...

நான் வைத்தீஸ்வரன் கோவில்ல பார்த்த இடம்: http://www.srisivanadi.com
அவங்க இணைய தளத்துலயே அவங்க முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளன. நீங்கள் போவதாக இருந்தால் முன்னரே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு போறது நேரத்தை மிச்சமாக்கும். கூகிள் மேப் screenshot மற்றும் coordinates கீழே:


சாப்பிடுவதற்கும் தங்குவதற்கும் 2 டீசெண்டான ஹோட்டல்கள் உள்ளன.
1) ஹோட்டல் அக்க்ஷர்தாம் 
2) ஹோட்டல் சதாபிஷேகம் 

அது போக நவகிரக கோவில்களில் ஒன்றான செவ்வாய்க்குறிய சிவன் கோவிலும் இங்குள்ளது. அதுனால 6 மணி நேரம் தாராளமாக இந்த ஊரில் பொழுது போக்கலாம். என்ன கொஞ்சம் காஸ்டலியான பொழுதுபோக்கு...

சென்னையில இருக்கீங்களா... வைத்தீஸ்வரன் கோவில் வரைக்கும் போக முடியாதா... கவலை வேண்டாம்... சென்னையிலும் ஒரு இடம் உள்ளது... அந்த இடத்தின் முகவரி மற்ற விவரங்கள் கீழே உள்ள screenshot ல்:



என்னோட family மற்றும் friends கிட்ட இருந்து வந்த opinions:

  • நம்ம பிறந்ததுல இருந்து இப்ப வரைக்கு உள்ள information தெளிவா சொல்றாங்க.. ஆனா எதிர் காலம் பத்தி சொல்றதுல பல விஷயங்கள் சரியாக இருந்தாலும், அவ்வளவு details இல்லை..  
  • சில நேரங்களில் நாடி ஜோதிடத்தை விட ஜோசியர்கள் ரொம்ப துல்லியமா கணிக்குறாங்க 
  • நம்மலா ஒரு விஷயத்துல கருத்து கேட்டா ஒருமாதிரி குத்து மதிப்பா தான் பதில் சொல்றாங்க 
  • சில நேரங்கள்ல அவங்க கணிப்புகள் தப்பாவும் இருக்கு

டிஸ்கி: இந்த நாடி ஜோதிடம் சம்பந்தமான பதிவுகளின் முதல் நோக்கம் அனுபவ பகிர்தலே.. இந்த ஜோதிடத்தில் சொன்னபடி நடக்குதோ இல்லையோ, அதை தெரிந்து கொள்வது ஒரு சுவாரசியமான அனுபவம். விருப்பமிருந்தால் அனுபவித்து பாருங்கள்.


Friday 25 November 2016

நாடி ஜோதிடம் -நம்பலாமா?! - 3

போன பதிவுல நம்மளோட மூல ஓலை எப்படி எடுக்குறதுனு பார்த்தோம்... எதிர்கால பலன்கள் தெரிஞ்சுக்கிறத பத்தி இந்த பதிவுல பார்ப்போம்.. முன்னாடியே சொன்ன மாதிரி மூல ஓலைக்கும் நம்மளோட பலன்களுக்கான ஓலைக்கும் ஏதோ link இருக்கு போல... அந்த link வச்சு நம்ம பலன்களை தேடி எடுக்குறாங்க.. இது கொஞ்சம் நேரம் எடுக்கிற வேலை தான்... சில நேரங்கள்ல ஓலை கிடைச்சதும் போன் பன்றேன்னு கூட சொல்லுவாங்க... ஆனா அது கொஞ்சம் அரிது தான்...

சரி, நம்ம ஓலையை கண்டு பிடிச்சுட்டாங்கனு வச்சிக்கோங்க... நம்ம மொத்த வாழ்க்கையோட விவரங்களும் செய்யுள் வடிவுல இருக்கும்... கொஞ்சம் கடினமான தமிழ்.நம்மளோட பொதுவான பலன்களை தெரிஞ்சுக்கிறத 'பொது காண்ட பலன்கள்' அப்படினு சொல்வாங்க... அது போக ஒரு 15 காண்டம் இருக்குனு நினைக்குறேன். அதுல ஒரு குறிப்பிட்ட அம்சம் பத்தி டீடைலா சொல்வாங்க... உதாரணத்துக்கு தொழில், திருமணம், தோஷம், பரிகாரம்னு ஒவ்வொரு அம்சத்துக்கும் இருக்கு... நமக்கு விருப்பம் இருந்தா கூடுதல் பணம் கட்டி தெரிஞ்சுக்கலாம். இதுல பரிகாரம் பத்தி பின்னால சொல்றேன்..

சரி, இப்ப பொது காண்டத்தை பாக்க போறோம்னு வச்சிக்குவோமே.. அதுலயும் ஒரு விஷயம் இருக்கு... நான் வைதீஸ்வரன் கோவில்ல பாத்த சென்டர்ல  பொது காண்டத்துலயே மேலோட்டமா சொல்றதும் இருக்கு, துல்லியமா இருக்குறதுக்கு இருக்குனு சொன்னாங்க... எந்த அளவுக்கு துல்லியம்னா, நம்ம சாகப்போற நாளை கூட தெரிஞ்சுக்கலாமாம்... ஆள விடுங்க சாமின்னு மேலோட்டமாவே தெரிஞ்சுகிட்டேன்...

இப்ப உங்க வயசு 30ன்னு வச்சுக்கிட்டா, இப்ப இருந்து ஒவ்வொரு 5 வருஷத்துக்கும் எப்படி இருக்கும்னு சொல்லுவாங்க.. உங்களோட 35 வயசு வரைக்கும் என்னென்ன நடக்கும்... 35-40 ல என்னென்ன நடக்கும் அப்டினு போய்கிட்டே இருக்கும்...பொதுவா ரொம்ப முக்கியமான விஷயங்களை மட்டும் குறிப்பா(specific) சொல்வாங்க.. உதாரணத்துக்கு எனக்கு கம்பெனி மாறுறது பத்தியும் குழந்தை பிறக்கிறது பத்தியும் சொன்னாங்க...

அதே நேரத்துல எதிர்மறையான பலன்களை முடிஞ்சா அளவுக்கு சொல்லாம தவிர்த்திர்றாங்க.. இல்ல அத ஒரு சின்ன விஷயம் மாதிரி தகவல்(Hint) குடுப்பாங்க... அந்த விஷயம் நடக்கும் போது தான் அதோட வீரியத்தை தெரிஞ்சுக்க முடியும் !!! நம்மளா வலுக்கட்டாயமா கேட்டா சொல்வாங்களானு தெரியல... தெரிஞ்சுக்கவும் வேண்டாமே...

உங்களோட மொத்த பலன்களையும் செய்யுள் வடிவுல நோட்டுல எழுதி குடுத்துருவாங்க... அதோட பலன்களை படிச்சு சொல்றத ஆடியோவா ரெக்கார்ட் பண்ணியும் குடுத்துருவாங்க... அவர் வாசிக்கும் போது உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்தா சைகை காமிச்சா ரெக்கார்டிங்கை நிப்பாட்டிட்டு பதில் சொல்வாங்க... இதுல என்னோட அபிப்ராயம் என்னனா, அவங்களா வாசிக்கறத மட்டும் தான் நம்பலாம்... நம்ம கேட்டு அவுங்க பதில் சொல்றதெல்லாம் பெரும்பாலும் வழக்கமான ஜாதக கணக்குகள் படி சொல்றது தான்..

என்னங்க இப்ப ஓரளவுக்கு தெளிவாகுதா இந்த பிராஸஸ்.. ஒரு சில பேர் என்ன எதுன்னு தெரிஞ்சுக்காமலே நாடி ஜோதிடம்னா ஃபிராடுன்னு சொல்வாங்க.. அதெல்லாம் நம்பாதீங்க... எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் நம்ம ஊர்ல நிறையவே இருக்காங்க...

இதே மாதிரி தான் பரிகாரம்னு பேச்செடுத்தாலே ஃபிராடுன்னு சொல்வாங்க..  அதையும் டெஸ்ட் பண்ணி பாப்போமேன்னு பார்த்தேன். வழக்கம் போல குருதட்சணைன்னு சொல்லி கொஞ்சம் பணம் கொடுத்தால் நல்லதுன்னு சொல்வாங்க.. குடுக்கறதும் குடுக்காததும் நம்ம இஷ்டம் தான்.. நான் கொடுக்கலை.. அதுக்கப்புறம் நம்ம போக வேண்டிய கோவில்களை சொல்றாங்க. அங்க போய் அர்ச்சனை பண்ணுங்கன்னு சொல்றாங்க.. அவ்ளோ தான்... அந்த கோவில்களுக்கு போறதும் போகாததும் கூட நம்ம விருப்பமே.. ஒரு விதத்துல எனக்கு ஆச்சர்யமா கூட இருந்துச்சு... எனக்கு ஒரு 6 கோவில் சொன்னாங்க... அதுல 4 கோவில் என்னோட வீட்ல இருந்து 5km தூரத்துக்குள்ள தான் இருந்துச்சு... மீதி 2 கோவில் 60km தூரம் தான்...

என்னோட தனிப்பட்ட கருத்துனு கேட்டீங்கன்னா, குமுதா ஹாப்பி தான்... மகிழ்ச்சி...